close
Choose your channels

பாரீஸ் நகருக்கு ஓய்வெடுக்க சென்ற பிஸியான பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் பாரிஸ் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் அல்லு அர்ஜுனுடன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டருக்கு அவர் பக்காவாக பொருந்தியதோடு, அல்லு அர்ஜுனுக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ’மிஷன் மஞ்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் ராஷ்மிகா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ’குட் பை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு தமிழ் தெலுங்கு திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் பாரீஸ் நகருக்கு ஓய்வெடுக்க சென்று இருப்பதாக கூறியுள்ள ராஷ்மிகா, அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘இன்று பாரிஸில் எனது முதல் நாள் நன்றாக இருந்தது என்றும் பாரீஸில் எடுக்கப்படும் புகைப்படங்களை அடுத்தடுத்து உங்களுக்காக பதிவு செய்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் ஒரு சில நாட்களுக்கு ராஷ்மிகா மந்தனாவின் பாரீஸ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.