close
Choose your channels

நான் குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க அரசியல் தலைவர் தான் காரணம்: விஜயசாந்தி

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ், தெலுங்கு நடிகையும், தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி, தான் குழந்தை பெற்றுக்கொள்ளாதற்கு ஒரு அரசியல்வாதி தான் காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் குடும்பம் இல்லாமல் பொது தொண்டு செய்தார் என்றும், அவரைப் பார்த்துதான் நானும் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன் என்றும், குழந்தைகள் பிறந்தால் சுயநலம் வந்துவிடும், அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தோடு இருந்தால் பொதுத் தொண்டு செய்ய முடியாது என்றும், எனவே ஜெயலலிதா போல் பொது தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக்கூடாது என்று முடிவு செய்தேன் என்றும், இந்த முடிவை என் கணவரிடம் கூறியபோது அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு அரசியல்தான் முக்கியம் என்றும் அரசியல் தான் என்னுடைய முழுப்பணி என்றும் இடையிடையே நல்ல கேரக்டர் வந்தால் மட்டும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டும் நடிப்பேன் என்றும் விஜயசாந்தி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.