சீரியல் நடிகை நவ்யா சுவாமியுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா! பரபரப்பு தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய பாதிப்பு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
அந்த வகையில் சமீபத்தில் ’வாணி ராணி’ சீரியல் உள்பட பல தமிழ் தெலுங்கு சீரியலில் நடித்த நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் ’தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தன்னுடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்
இந்த நிலையில் நவியா சுவாமி உடன் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணா என்பவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’கடந்த 3 நாட்களுக்கு முன்தான் தான் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் கடவுள் புண்ணியத்தில் தான் தற்போது குணமாகி வருவதாகவும் தற்போது கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
அதேசமயம் தன்னுடன் பணிபுரிந்த, தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தாங்களே பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் என்பது ஒரு அசிங்கப்பட டிய விஷயம் இல்லை என்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை யாரும் ஒதுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments