close
Choose your channels

சிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் கண்கலங்கிய பிரபல நடிகை

Saturday, October 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த 'ரெமோ' நன்றி அறிவிப்பு விழாவில் தன்னை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்று சிவகார்த்திகேயன் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட சம்பவம் கோலிவுட்டையே உலுக்கியுள்ளது. அவருக்கு ரஜினி, விஜய், விஷால், சிம்பு உள்பட பலர் ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை அடுத்து இன்று ஒரு பிரபல நடிகை உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுத்துள்ளார். அவர் தான் நடிகை பூர்ணா. 'முனியாண்டி விலங்கியல் 3ஆம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூர்ணா அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்தாலும் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். இந்நிலையில் தற்போது அவர் மிஷ்கினின் 'சவரக்கத்தி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை பூர்ணா, "நான் முதல் படத்தில் நடித்தபோது எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது புரிந்தது. படங்கள் கிடைக்காததால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்த நேரத்தில், தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று கூறுவதை எனக்கு கிடைத்த வரமாகவே கருதுகிறேன் என்று மேடையிலேயே கண்கலங்கினார். பூர்ணாவின் இந்த பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.