close
Choose your channels

'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்.. சுரேஷ் சந்திரா கூறிய என்ன?

Tuesday, May 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’குட் பேட் அக்லி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் இரண்டே நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும் முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சி மற்றும் அஜித்தின் இன்ட்ரோ பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு குறித்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியபோது ’தற்போது ஹைதராபாத்தில் 'குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு ஜூன் 7ஆம் தேதி நடைபெற நடைபெறும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது என்றும் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற நாளில் மட்டும் தான் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு நடிகர் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.