close
Choose your channels

முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

Saturday, January 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'வணக்கம் சென்னை' படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் 'காளி'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் அஞ்சலி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். கிருத்திகா உதயநிதி, விஜய் ஆண்டனி ஆகியோர்களுடன் பணிபுரிந்தது சிறப்பானதாக இருந்ததாகவும், இந்த டீமை தான் மிஸ் செய்வதாகவும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து வருகிறார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.