close
Choose your channels

சொன்ன சொல்லை காப்பாற்றாத அர்ச்சனா கல்பாத்தி.. என்ன ஆச்சு?

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் டைட்டில் வெளியாகாததை அடுத்து சொன்ன சொல்லை அவர் காப்பாற்றவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தை தயாரிக்க போவதாக அறிவித்திருந்தார் என்பதும் இந்த படம் குறித்த முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபயரான டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் ’ஃபயரான டைட்டில் தானே வைத்து விடுவோம்’ என்றும் ’தீப்பொறி திருமுகம்’ என்ற வைக்கலாமா என்று பிரதீப் ரங்கநாதனும் ஜாலியாக தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் வரவில்லை என்பதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒருவேளை இரவு 9 மணிக்கு வருமோ? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கசிந்த தகவல்படி இந்த படத்திற்கு ’ஃபிளேம்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.