close
Choose your channels

விஜய்யின் நெய்வேலி செல்பியை பார்த்த முதல் நடிகர்: பரபரப்பு தகவல் 

Friday, December 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது அந்த படப்பிடிப்பை காண வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் ஒரு செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் என்பதும், அந்த பதிவு சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டில் அதிக அளவில் ரீட்வீட் செய்யப்பட்ட டுவிட் என்று அந்த செல்பி டுவிட்டுக்கு பெருமையும் கிடைத்தது

இந்த நிலையில் இந்த செல்பி புகைப்படத்தை முதன் முதலில் பார்த்தது நான்தான் என்று பெருமையுடன் ’மாஸ்டர்’ நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும், அந்த செல்பியை பார்க்க தான் ஆசைப்பட்டதாகவும், மறுநாள் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் சென்று அந்த செல்பியை தனது காண்பிக்கும்படி கூறியதாகவும் அப்போது விஜய் தனது செல்போனில் உள்ள அந்த புகைப்படத்தை காட்டியபோது தான் பார்த்ததாகவும் நடிகர் அர்ஜூன் தாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

எனவே விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் செல்பியை பதிவு செய்து முன்னரே அர்ஜுன் தாஸிடம் அந்த செல்பி புகைப்படத்தை காட்டி உள்ளதால் இந்த செல்பி புகைப்படத்தை பார்த்த முதல் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.