close
Choose your channels

இன்று முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அடுத்த அவதாரம் ஆரம்பம்

Sunday, May 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களில் வெற்றி பெற்றவர். இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்றுமுதல் தொடங்குகிறார்.
அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கும் 'காதலின் பொன் வீதியில்' என்ற படத்தின் படப்பிடிப்பை இன்று அர்ஜுன் ஆரம்பிக்கவுள்ளார். இந்த படத்தை அர்ஜூன் தயாரிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் சாந்தன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rise in Love' என்ற அடைமொழியுடன் காதல் படமாக உருவாகவுள்ள இந்த படம் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.