close
Choose your channels

குழந்தை விவகாரம்.. நீதிமன்ற தீர்ப்பை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் ரக்ஷிதா ..!

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ரக்ஷிதா தனது சமூக வலைத்தளத்தில் குழந்தை குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் ரக்ஷிதா இருந்தார் என்பதும் அவர் அந்த போட்டியில் 91 நாட்கள் தாக்குப் பிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் ரக்ஷிதாவும் அவருடைய கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக கூறப்பட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது ரக்ஷிதாவுக்கு ஆதரவளித்து பல பதிவுகளை சமூக வலைதளத்தில் அவரது கணவர் பதிவு செய்திருந்தார். இருப்பினும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும் சரி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் சரி, ரக்ஷிதா தனது கணவர் குறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விக்ரமனுடன் ரக்ஷிதா பேசிக்கொண்டிருந்த போது ’தான் கூடிய விரைவில் ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாக தெரிவித்து இருந்தார். மேலும் குழந்தை மீது தனக்கு மிகுந்த ஆசை என்றும் அதுவும் பெண் குழந்தையை பார்த்தால் தனக்கு மிகுந்த பிரியம் என்றும் அவர் ஒரு சில பேட்டிகளிலும் கூறியிருந்தார்..

இந்த நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் ’தனியாக வாழும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்திருந்தது. இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள ரக்ஷிதா ’இது போதும், இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரக்ஷிதா விரைவில் ஒரு குழந்தையை தத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.