close
Choose your channels

இதுக்கு ஜூலி நூறு மடங்கு மேல் போல் தெரியுதே! ஐஸ்வர்யாவின் அட்டுழியங்கள்

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் உள்ளப் போட்டியாளர்களில் பிக்பாஸின் முழு ஆதரவை பெற்றவர் ஐஸ்வர்யா. மக்கள் வாக்குகள் போட்டு அவரை வெளியேற்ற நினைத்தாலும் பிக்பாஸ் அவருக்கு பதிலாக இன்னொருவரைத்தான் வெளியேற்றுவார். அதேபோல் அவர் நாமினேட் ஆனாலும் அவருக்கு சிறப்பு சலுகை கொடுத்து நாமினேஷனில் இருந்து வெளியே வரவும், அடுத்த வாரம் அவரை தலைவியாக்கி ஐஸ்வர்யா நாமினேட் ஆகாதவாறும் பார்த்து கொள்வார்

பிக்பாஸின் முழு ஆதரவு இருப்பதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, நேற்று கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டின் தலைவி என்ற முறையில் நேற்று அவர் செய்த அட்டூழியங்களே தாங்க முடியாத அளவு இருந்தது. குறிப்பாக அவர் பாலாஜியிடம் நடந்து கொண்ட விதம் அருவருப்பை அளித்தது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை பாலாஜி மீது கொட்டுவது, தண்ணீரில் மிளகாய்ப்பொடியை கரைத்து ஊற்றுவேன் என்பது, பாலாஜி தூங்கும்போது கரண்டியால் தட்டி வேண்டுமென்றே சத்தம் வரும்படி செய்வது, ரூம் ஸ்ப்ரேயை எடுத்து முகத்தில் அடிப்பேன் என்று கூறுவதையெல்லாம் பார்க்கும்போது ஜூலி எவ்வளவோ மேல் என்று தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் கூட ஐஸ்வர்யாவை இதுவரை கண்டிக்கவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.