close
Choose your channels

இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும்தான்: கதறி அழுத நமிதா மாரிமுத்து

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜாலியாகவும் கூத்தும் கும்மாளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை சொல்லும் காட்சிகள் மட்டுமே சோகமயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் சிலர் தங்களுடைய கதையை உருக வைக்கும் அளவுக்கு கூறிய நிலையில் இன்று நெஞ்சை உலுக்கும் வகையில் நமிதா மாரிமுத்து தனது கதையை கூறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான அவர் கூறியபோது ’நம்ம வாழ்க்கையில் எப்போதுமே ஒருவரிடம் குறை இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்கள் அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. ஆனால் என்னிடம் ஒரு குறை ஏற்பட்டபோது எங்க அம்மா என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. என்னை அடி அடியென்று அடித்தார்கள். உடம்பெல்லாம் மரத்து போய்விட்டது

இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் எல்லாருமே பாலியல் நபர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் தான் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டுமே. வேறு யாரும் காரணம் இல்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதோ மாறிவிட்டோம், நீங்கள்தான் மாற வேண்டும் என்று அவர் கதறி அழுது கொண்டே கூறியது சக போட்டியாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது

மொத்தத்தில் நமிதா மாரிமுத்து ஒட்டுமொத்த திருநங்கைகளின் மனக்குமுறல்களை இன்று வெளிப்படுத்தும் காட்சியாக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.