close
Choose your channels

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீ வந்ததே வேஸ்ட்: பிரியங்காவை கூறுவது யார் தெரியுமா?

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நீ வந்ததே வேஸ்ட் என பிரியங்காவை பார்த்து அவரது சக போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவரும் ஆரம்ப கட்டத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகள் மற்றும் விளையாட்டுகள் பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக குறிப்பாக கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் பிரியங்காவால் முதல் நபராக நிரூப் வெளியேற்றப்பட்டதால் பிரியங்கா மீது நிரூப் கடுங்கோபத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. நீ இந்த வீட்டில் வந்து நடிக்கிறாய் என்று தோன்றுகிறது என்றும், இந்த 100 நாள் விளையாட்டு ஷோவில் உன்னுடைய யுக்தியை வெளிப்படுத்தி உன்னை நீ புத்திசாலியாக காண்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நீ வந்திருக்கிறாய் என்றும் இந்த வீட்டுக்குள்ளே நீ வந்ததே வேஸ்ட் எனவும் நிரூப் கூறுகிறார். நிரூப்புக்கு பதில் சொல்ல முடியாமல் பிரியங்கா அதிர்ச்சியடைவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.