close
Choose your channels

கமல்ஹாசனை பேச விடாமல் பட்பட்டென்று பேசிய தாமரை-பாவனி!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் இடையே ஆவேசமான சண்டை வந்தது என்பதும் ஒருவருக்கொருவர் அடிப்பதற்காக கை ஓங்கும் அளவிற்கு அந்த சண்டை நீடித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சண்டையின் பஞ்சாயத்து என்று கமல்ஹாசன் முன்னிலையில் வருகிறது. இது குறித்து கமல்ஹாசன் விசாரிக்க முயற்சித்த போது ’இந்த பொண்ணு என்னையே குறை சொல்கிறது. என்னுடைய மனது நோகும் படி பேசுகிறது’ என்று தாமரை குற்றஞ்சாட்டுகிறார். அதனால் எனக்கு கோபம் பயங்கரமாக வருகிறது என கூற, அப்போது பாவனி, ‘தாமரை ஏதோ உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தான் பேசுகிறார்கள்’ என்று கூறிவிட்டு, ‘அதன்பின் தனக்கு ஒரு சந்தேகம் என்றும் தாமரை பட்பட்டென்று பேசுகிறார்கள் என்று கூற, அவரைப் பேச முடிக்க விடாமல் ’நான் எதில் பட்பட்டென்று என்று பேசினேன் என்று தாமரை கேட்க, நீங்கள் பட்பட்டென்று பேசவே இல்லையா என பாவனி திருப்பி கேட்க, ‘எது நியாயம் இல்லையோ அதில்தான் நான் பட்பட்டென்று பேசுவேன் என தாமரை சொல்ல, அப்போது கமல்ஹாசன் ஏதோ சொல்ல வரும்போது அவர் சொல்ல வருவதை கவனிக்காமல் தாமரை மற்றும் பாவனி ஆகிய இருவரும் வாதம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

முன்னதாக இன்றைய முதல் புரமோவில், ‘தீபாவளி சலுகையாக எவிக்சன் இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்சன் உண்டு என்று கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.