close
Choose your channels

மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார்.. பிரபல ஒளிப்பதிவாளரின் பதிவு.. நெட்டிசன்ஸ் ரியாக்சன் என்ன?

Tuesday, February 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார் என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவரது பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

நேற்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்ததை அடுத்து அவருக்கு பதிலாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்தார். அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனது உரையை நிகழ்த்திய கவர்னர் ரவி, ‘தமிழக அரசின் உரையில் உண்மை இல்லை என்பதால் தான் அந்த உரையை வாசிக்கவில்லை என்றும் கூறிவிட்டு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தோடு சட்டசபையில் இருந்து தேசிய கீதம் ஒலிக்கும் முன்னர் வெளியேறினார். கவர்னரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பி.சி ஸ்ரீ ராம் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறுகையில் ’மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார், உங்களது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டும் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.