close
Choose your channels

சென்னையின் பழம்பெரும் திரையரங்கில் 'நேர் கொண்ட பார்வை

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையின் பழம்பெரும் திரையரங்கம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ தியேட்டர். கடந்த 1941ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்த திரையரங்கம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கில படங்களும் அதன்பின் தமிழ் படங்களும் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களும் இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது

இந்த நிலையில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இந்த திரையரங்கத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக இந்த தியேட்டர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது முழு அளவில் முடிந்துள்ளதாக திரையரங்கு நிர்வாகிகள் தெரிவித்தனர். பழைய மரத்தினால் ஆன பெஞ்சுகள் நாற்காலிகள் மாற்றப்பட்டு நவீன வகையில் குஷன் சீட்டுகள் போடப்பட்டுள்ளதாகவும் புரஜொக்டர் சிஸ்டம் மற்றும் ஆடியோ சிஸ்டம் தரம் உயர்த்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திரையரங்கு நிர்வாகிகள் தெரிவித்தனர்

மேலும் காசினோ திரையரங்கம் புதுப்பொலிவுடன் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நவீனமயமாக்கப்பட்ட இந்த திரையரங்கில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் திரையரங்கு நிர்வாகிகள் தெரிவித்தனர்

சென்னையின் பழம்பெரும் திரையரங்கில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை காண ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.