close
Choose your channels

நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை: பிரபலத்துடன் இணைந்தது குறித்து 'கோமாளி' இயக்குனர் 

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் அவருடன் இணைந்து பணி வருவேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என ‘கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், உள்பட பலர் நடித்த ‘கோமாளி’ திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில். ‘எனது பள்ளிக்காலங்களில் ’பையா’ படத்தின் பாடல்களை நான் திரும்பத் திரும்ப கேட்டு ரசித்து இருக்கின்றேன். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா அவர்களுடன் இணைந்து பணிபுரிவேன் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். பிரதீப் ரங்கனதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.