close
Choose your channels

சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது ஆபாச விமர்சனம். நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்

Monday, January 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் ஒருசிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். அந்த வகையில் நித்தியானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வைரமுத்து குறித்து கொச்சையான விமர்சனங்களை வைக்க, அவருடன் இருந்த காவியுடை தரித்த சிறுமிகள் ஆபாச வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா உள்பட பலர் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். உண்மையில் இந்து மதத்தின் எதிரி இவர்கள்தான் என்றும், இவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் கூறினர்

இந்த நிலையில் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக ஆபாசமாக  விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக நல ஆர்வலர் பியூஷ் மானுஷ் என்பவர் கர்நாடகா மாநில போலீசாருக்கு இமெயில் மூலம் புகார்க்கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் கர்நாடக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.