close
Choose your channels

'மேகம் கருக்காதா', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்: எழுதி பாடியது யார் தெரியுமா?

Friday, July 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ’தாய்க்கிழவி’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் சற்று முன்னர் ’மேகம் கருக்காதா’ என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் அந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்ய தனுஷ் எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடலை எழுதி பாடியுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் எழுதிய இந்த பாடலின் சில வரிகள் இதோ;

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே

கண்பாஷை பேசினால் என்ன செய்வேன்
கன்பூஷன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே
பார்க்க பார்க்க துடிக்குது
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே

மித்ரஜ் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos