close
Choose your channels

திரையரங்கில் மிஸ் செய்த சூப்பர் காட்சி: 'வாத்தி' டெலிடட் சீன் ரிலீஸ்..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த வார்த்தை ‘வாத்தி’ கடந்த மாதம் வெளியானது என்பதும் இந்த படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. ‘வாத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று ‘வாத்தி’ ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘வாத்தி’ படத்தின் டெலீட்டட் சீன் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்

பள்ளியில் நடக்கும் விழா ஒன்றில் இந்தியாவிலேயே முதல் மாணவனாக வந்த மாணவரை பேச விழாக்குழுவினர் அழைக்கின்றனர். அப்போது அந்த மாணவர் பேச வரும்போது தன்னுடைய கோச்சிங் சென்டரால்தான் அந்த மாணவர் முதல் இடத்தில் வந்தார் என்பதை கூற வேண்டும் என சமுத்திரகனி மறைமுகமாக அந்த மாணவருக்கு கூறுகிறார்.

ஆனால் அந்த மாணவர் சமுத்திரக்கனி தந்த பேப்பரை கிழித்து போட்டுவிட்டு ’நான் இந்தியாவிலேயே முதல் மாணவராக வருவதற்கு காரணம் பாலமுருகன் சார் தான்’ என கூற உடனே தனுஷின் முகம் தெரிகிறது. இந்த டெலிடட் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது ஏராளமான பார்வையாளர்கள் இதை பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.