close
Choose your channels

'சூர்யா 40' படத்திற்கு மாஸ் டைட்டில்: பிறந்த நாளில் அப்டேட் தந்த இயக்குனர் பாண்டிராஜ்!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 40’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாளில் அவர் தான் இயக்கி வரும் ’சூர்யா 40’ படத்தின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்

’சூர்யா 40’ திரைப்படம் 35 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை எடுத்த வரைக்கும் படம் நன்றாக வந்திருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க இருப்பதாகவும் தங்களுடைய படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் மாஸாக இருக்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் வெளிவரும் என்றும் ஜூலை வரை எங்களுக்கு காத்திருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இயக்குனர் பாண்டிராஜின் இந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.