close
Choose your channels

பிரபல தமிழ் இயக்குனருக்கு கிடைத்த ஆஸ்கார் விருது

Tuesday, February 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று உலகம் முழுவதும் திரை நட்சத்திரங்கள் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் லா லா லேண்ட், மூன்லைட் ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் 'இறைவன் எனக்கு கொடுத்த ஆஸ்கார் விருது இதுதான்' என்று ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த இயக்குனர் யார்? அவர் கூறிய சம்பவம் என்ன என்பதை தற்போது பார்போம்

சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். பின்னர் ஒருசில வருடங்கள் கழித்து அவர் இயக்கிய விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இந்த காதல் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பா? அல்லது அடுத்த படம் குறித்த ஆலோசனையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட இந்த நாளில் இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார்' என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் சந்திப்பு ஆஸ்கார் விருதுக்கு சமம் என்ற அர்த்தத்தில் கூறிய விக்னேஷ் சிவனுக்கு ரஜினி ரசிகர்களின் பாராட்டு மழை குவிந்து வருகிறது

தற்போது விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.