close
Choose your channels

அஜித் படத்தை இயக்குகிறாரா 'எப்.ஐ.ஆர்' மனு ஆனந்த்? அவரே அளித்த பதில்!

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனு ஆனந்த், அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் கௌதம் மேனன் அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறினார். இந்த படத்தின் போது தனக்கு மிகப்பெரிய அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பாக அஜித் தனக்கு கூறிய அறிவுரைகள் தனக்கு வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்

அப்போது அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை எப்போது பெறுவீர்கள் என்று கேட்டதற்கு இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை, ஆனால் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவனாக கருதப்படுவேன் என்று கூறினார்

மேலும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தில் ஒரு கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என எனது குருநாதர் கவுதம் மேனனிடம் கூறி, இது குறித்து எப்போது பேச வரலாம் என நான் அனுமதி கேட்டேன். அதற்கு அவர், ‘எப்போது படப்பிடிப்பு என்று மட்டும் கூறுங்கள்’ என்று கூறியது அவர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை காட்டியுள்ளது’ என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.