விருதுகளை குவித்தது 'சூரரைப் போற்று': சூர்யா உள்பட 5 பேருக்கு தேசிய விருது!


Send us your feedback to audioarticles@vaarta.com


68வது தேசிய விருது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தேசிய விருது அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ’சூரரைப்போற்று’ திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 தேசிய விருதுகளை ‘சூரரைப்போற்று’ படம் வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெறுகின்றனர். சிறந்த இசைக்கான விருது ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்காராவுக்கும் கிடைத்துள்ளது. இதனையடுத்து சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த இயக்குனருக்கான விருது ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தை இயக்கிய இயக்குனர் சசிதானந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த வசனம் விருது ’மண்டேலா’ படத்திற்காக மடோனா அஷ்வினுக்கு கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.