close
Choose your channels

டேஞ்சர் ஜோனில் இருக்கும் நால்வர்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

Friday, November 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா, நிவாஸினி, ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இவர்களில் 4 பேர் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவாஸினி, ஆயிஷா,ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய நால்வருமே கிட்டத்தட்ட சம அளவில் வாக்குகள் பெற்றிருப்பதாகவும், பதிவான வாக்குகளில் சுமார் 7 முதல் 8 சதவீத வாக்குகளை மட்டுமே நால்வரும் பெற்று உள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து இந்த நால்வரில் யார் வேண்டுமானாலும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பாக நிவாஸினி வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

சக போட்டியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டாலும் மக்களின் ஆதரவு அசீமுக்கு அதிகம் இருப்பதால் அவர் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அசீமை அடுத்து தனலட்சுமி மற்றும் ஜனனி அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் டேஞ்சர் ஜூனில் இருக்கும் நிவாஸினி, ஆயிஷா, ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய நால்வரில் இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.