close
Choose your channels

செல்வராகவன் மீது லவ் வந்தது எப்போது? பேட்டி எடுத்த கீதாஞ்சலியின் வீடியோ

Friday, March 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்தது. அவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் ‘சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் தனுஷ் நடிக்கவிருக்கும் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது கணவர் செல்வராகவனிடம் எடுத்த பேட்டி ஒன்றில் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதிய ‘கானல்நீர்’ என்ற கதையை படித்து தான் உங்கள் மீது எனக்கு காதல் வந்தது என்றும் அந்த கதை அவ்வளவு அழகான பேண்டஸி கதை என்றும் அதுதான் இரண்டாம் உலகம் இன்று திரைப்படமாக வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர் முதன்முதலாக செல்வராகவனின் மீது காதல் வந்ததற்கு ‘கானல் நீர்’ என்ற கதையை படித்தது தான் காரணம் என்பது இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர் என்பதும் சமீபத்தில் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் இருவருமே பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.