close
Choose your channels

நடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்? பரபரப்பு தகவல்

Sunday, March 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் வீடுகளுக்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாடு சென்று வந்தவர்கள் பட்டியலில் தளபதி விஜய் பெயரும் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று விஜய் வீட்டில் உள்ள யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து விசாரித்ததாக தெரிகிறது.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக விஜய் வீட்டில் உள்ள யாரும் வெளிநாடு செல்லவில்லை என அங்கிருந்தவர்கள் கூறியதை அடுத்து விஜய் வீட்டில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நோட்டீசை ஒட்டாமல், கிருமிநாசினியை மட்டும் தெளித்துவிட்டு அதன்பின் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் திரும்பி வந்ததாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.