close
Choose your channels

நடிகை சமந்தாவின் தப்பாத 'தெறி' கணக்கு

Thursday, July 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா நடித்த 'கத்தி', தெறி' மற்றும் 'மனம்' போன்ற படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது அறிந்ததே. ஆனால் சமந்தாவின் இந்த 100, அவரது பள்ளிப்பருவத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது என்பது தற்போது புரிகிறது.
சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழை பதிவு செய்துள்ளார். அதில் அவர் 10ஆம் வகுப்பில் கணக்கு பாடத்தில் 100 மார்க் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் பள்ளி ஆசிரியர்களால் பாராட்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரிகளில் வெற்றி பெற்று, திரைத்துறையிலும் வெற்றி பெற்ற சமந்தா விரைவில் குடும்ப வாழ்க்கையிலும் 100 மதிப்பெண் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.