close
Choose your channels

சென்னையில் எனக்கும் பாலியல் தொல்லை: நடிகை ரெஜினா

Friday, April 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகை ரெஜினா தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

தான் ஒருநாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் அருகே நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது உதட்டை பிடித்ததாகவும் அந்த சம்பவம் தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்டு வர சில வினாடிகள் ஆனதாகவும், அதன்பின்னர் அந்த இளைஞரை தனக்கு தெரிந்த ஆங்கிலம் மற்றும் தமிழ் கெட்டவார்த்தையால் திட்டியதாகவும் கூறினார்.

இதேபோல் அடுத்தடுத்து ஓரிரண்டு சம்பவங்கள் தனக்கு நிகழ்ந்ததாகவும், அந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை தான் கண்டித்தது மட்டுமின்றி அடித்ததாகவும் ரெஜினா கூறியுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.