close
Choose your channels

'சர்கார்' படத்தின் கதை இதுதானா?

Sunday, October 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்கார் படத்தின் டீசரில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து தங்களது கற்பனைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டீசருக்கு பொருத்தமாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஒரு கதையை தற்போது பார்ப்போம்

வெளிநாட்டில் கார்ப்பரேட் முதலாளியாக இருக்கும் விஜய் ஓட்டு போடுவதற்காக சொந்த நாட்டுக்கு வருகிறார். அப்போது அவரது ஓட்டை யாரோ ஒருவர் கள்ளத்தனமாக போட்டிருப்பதை அறிகிறார். இதனால் ஆத்திரம் அடையும் விஜய் நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

நீதிமன்றத்தில் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. அதனால் மறுதேர்தல் நடைபெறுகிறது. இந்த மறுதேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து விஜய்யே போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அவருடைய வெற்றியால் அரசியல் சூழல் மாறி விஜய்யையே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் கட்டாயம் வருகிறது. ஒரே ஒரு தொகுதியின் மறுதேர்தல் ஒரு ஆட்சியையே மாற்றிவிடுவதோடு அதன் பின் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள் தான் 'சர்கார்' படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த கதை உண்மைதானா? இல்லையா? என்பதை வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.