close
Choose your channels

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் உருக்கமான வேண்டுகோள்

Saturday, March 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரின் பிறந்த நாள் வரும் 7ஆம் தேதி வரவுள்ளது. இதனையடுத்து அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது பிறந்தநாள் பரிசாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது இது ஒன்று மட்டுமே! எனது அம்மாவின் ரசிகர்களான நீங்கள் அனைவரும் உங்களது பெற்றோரைக் கொண்டாடுங்கள், பெற்றோரிடம் பணிவு கலந்த மரியாதையுடன் இருங்கள், உங்களது அன்பை உங்கள் பெற்றோர் உணர்ந்து கொள்ளுமாறு நடந்து கொள்ளுங்கள். உங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். என் அம்மாவின் மீதான உங்களது அன்பின் பேரில் நான் இந்த வேண்டுகோளை உங்களிடம் விடுக்கிறேன். என் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் மறைவை அவரது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் நிலையில் ஜான்வி கபூரின் இந்த உருக்கமான வேண்டுகோள் மீண்டும் ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வேண்டுகோள் இதுவரை பெற்றோர்களை மதிக்காமல் இருந்தவர்களை நிச்சயம் திருத்தும் என்றும் கருதப்படுகிறது. தாய், தந்தை இருக்கும்போது அவர்களது அருமை பலருக்கு தெரிவதில்லை. இதை அனுபவத்தால் உணர்ந்த ஜான்விகபூரின் இந்த வேண்டுகோளை அவரது ரசிகர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.