close
Choose your channels

ஜோக்கர்' இயக்குனரின் அடுத்த திட்டம் என்ன? புதிய தகவல்

Monday, August 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான அரசியல் நையாண்டி படமான 'ஜோக்கர்' திரைப்படத்திற்கு எட்டு திக்கில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜூமுருகனின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராஜூமுருகன் கூறியபோது, 'குக்கூ ஒரு அழகான காதல் கதையாகவும், 'ஜோக்கர்' சமூக அவலத்தை காட்டும் ஒரு படமாக இருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், தற்போது தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகவும் ராஜூமுருகன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின் 'ஜோக்கர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தனக்கு ஆசை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இயக்குநர் லிங்குசாமி அவர்களிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் லிங்குசாமி 'ராஜுமுருகன் என்னிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை நான் தான் அவரிடமிருந்து கற்றுள்ளேன்' என்று கூறியது அவருடைய பெருந்தன்மையாகும்.
'ஜோக்கர்' படத்தை பார்த்துவிட்டு இதுவரை யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நல்லகண்ணு, சகாயம் ஐ.ஏ.எஸ், திருமாவளவன், ரஜினிகாந்த் உள்பட பலர் இந்த படத்தை பாராட்டியது தனக்கு பெருமையாக உள்ளது என்றும் இயக்குனர் ராஜூமுருகன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.