close
Choose your channels

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு கொரோனா… சோகத்தில் ரசிகர்கள்!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாப் இசை உலகில் பல அடுக்கடுக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருப்பவர் பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவருடைய இசை நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

கனடிய பாடகரான ஜஸ்டின் பீபர் சிறு வயதிலேயே பல ஹிட் பாடல்களைக் கொடுத்து உலகம் முழுக்க உள்ள ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது 285 மில்லியன் சொத்து மதிப்பு அதாவது 2,128 கோடி சொத்துமதிப்பை கொண்டிருக்கிறார். பாடுவதைத்தவிர சிறந்த பாடலாசிரியராகவும் நடிகராகவும் இருந்துவருகிறார். மேலும் நன்கொடையாளராகவும் இவரை அறிய முடிகிறது.

இந்நிலையில் ஜஸ்டின் பீபருக்கு கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் லாஸ் வேகாஸில் நடைபெற இருந்த அவருடைய இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜுன் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இவருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் நல்ல உடல்நிலையுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற பாடகரான ஜஸ்டின் பிபர் கடந்த 2018 இல் சூப்பர் மாடலான ஹெல்லி பால்ட்வினை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.