close
Choose your channels

நிக்சனை கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுத்த கமல்... மாயா, பூர்ணிமாவின் ரியாக்சன்..!

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோவில் போட்டியாளர் நிக்சனை கமல்ஹாசன் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’நிக்சன் என்னிடம் விசித்ரா மேம் என்று உங்களை கூப்பிட வேண்டுமென்றால், என்னை நிக்ஸன் சார் என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னதாக விசித்ரா கமல்ஹாசனிடம் கூறினார். அப்போது நிக்சன் எழுந்து ’நான் சார் என்று கூப்பிடுமாறு சொல்லவே இல்லை’ என்று கூற அதற்கு ’நீங்கள் சொன்னதை நான் பார்த்தேனே’ என்று கமல்ஹாசன் கூறினார். இதனை அடுத்து நிக்சன் ’எனக்கு சொன்னதாக ஞாபகம் இல்லை ’என்று கூற உடனே பதிலடியாக ’எங்களுக்கு ஞாபகம் இருக்கு’ என்று கமல் கூறினார்.

இதனை அடுத்து ’ஐஷு எலிமினேட் ஆனதற்கு நான் தான் காரணம் என்று நிக்சன் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று விசித்ரா கூற ’அப்படி நினைக்கிறீர்களா நிக்ஸன்? என்று கமல்ஹாசன் கேட்கிறார். ’அந்த கோபத்தை தான் அவன் என்னிடம் காண்பித்தார்’ என்ற விசித்ரா கூற, ’அப்படி கோபப்பட்டிங்களா நிக்சன் நீங்க? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு நிக்சனை பதில் சொல்ல முடியாத அளவுக்கு கமல் திணற வைத்தார். நிக்சனை கமல் கேள்வி மேல் கேள்வி கேட்கும்போது மாயாவும், பூர்ணிமாவும் அதிர்ச்சி அடைந்தவாறு பேசாமல் உட்கார்ந்திருக்கின்றனர்.

ஆனால் பார்வையாளர்கள் ப்ரோமோவில் எல்லாம் நன்றாகத் தான் கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார், ஆனால் முழு எபிசோடை பார்த்தால் தான் எப்படி இருக்கிறது என்று தெரியவரும் என்று கமெண்டில் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.