close
Choose your channels

வெள்ள நிவாரண நிதி: கார்த்தியிடம் கமல்ஹாசன் கொடுத்த ரூ.15 லட்சம்

Friday, December 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் மூலம் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது கமலஹாசனும் இணைந்துள்ளார். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் கமல்ஹாசன் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நட்களுக்கு முன் வெள்ளச்சேதம் குறித்து கமல் தெரிவித்த ஒரு கருத்துக்கு தமிழக அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கமல் தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனிடையே கமல் ரூ.15 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.