close
Choose your channels

எதிர்பாராமல் நேர்ந்த திடீர் விபத்து: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ அனுமதி..!

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரபல திரைப்பட பின்னணி பாடகி மற்றும் கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ தமிழ் உள்பட பலமொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடல் உள்பட பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இளையராஜா, ஏஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பல இசையமைப்பாளர்களிடம் அவர் பணி புரிந்துள்ளார் என்பதும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக பாம்பே ஜெயஸ்ரீ லண்டனுக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அப்போது அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சுயநினைவு இழந்து உள்ளதாகவும் அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.