close
Choose your channels

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். பிரபல நடிகர் ஆவேச பேட்டி

Tuesday, January 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுந்துள்ளது. தமிழகத்தின் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்று தமிழ் அமைப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதால் கடைசி வரை இதுகுறித்து டென்ஷனாகவே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு, ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம்மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்' என்று ஆவேசமான அறிக்கை ஒன்றை விடுத்தார்.
தற்போது இன்னொரு பிரபல நடிகரும் நடிகர் சங்க துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், 'நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்' என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வராக சசிகலா வரவேண்டும் என்றும், டெல்டா விவசாயிகள் பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.