close
Choose your channels

'2.0' திரைப்படம் 2.ஓஹோ என ஓடவேண்டும்: பிரபல இயக்குனர் வாழ்த்து

Thursday, November 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் குழுவினர்களின் நான்கு வருட உழைப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'முத்து', 'படையப்பா' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், '2.0' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'2.0' திரைப்படம் எந்த வருடம் வந்தாலும் அதன் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையாது. ரஜினியை ஆக்சன் ஹீரோவாக பார்க்கவும், இளமையாக பார்க்கவும், புது ஸ்டைலில் பார்க்கவும்தான் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். நானும் அவருடைய ரசிகர்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பிரமாண்டம் குறித்து சொல்லவே வேண்டாம், ஷங்கர் பின்னியிருப்பாரு. எனவே ரஜினிகாந்த், ஷங்கர், அக்சயகுமார், சுபாஷ் , ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மொத்தத்தில் 2.0 திரைப்படம் 2.ஓஹோ என வெற்றி பெற வேண்டும்' என்று இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்,.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.