close
Choose your channels

ஏன் இவ்வளவு சத்தம்? ரஜினி பேட்டி குறித்து குஷ்பு

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மும்பையில் நடைபெறவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்கு தெரியாது, ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நதிகளை இணைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேட்டியை வைத்து அவர் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகளும், ஒருசில ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த பேட்டி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, 'ரஜினி அவர்கள் கூறியதை வைத்து ஊடகங்கள் ஏன் இவ்வளவு சப்தம் செய்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது. நதிகள் இணைப்பு குறித்து ஒரு குடிமகனாக தனது கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? இதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.