close
Choose your channels

'லியோ' தயாரிப்பாளர் திடீரென தொடர்ந்த வழக்கு.. இன்றே அவசர வழக்காக விசாரணை..!

Monday, October 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக 4 மணி, 7 மணி காட்சிகள் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில் ’லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அதேபோல் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் முறையிட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.