close
Choose your channels

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. கணவர், மகள்கள் அதிர்ச்சி..!

Friday, September 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர். இவர் நோட்புக், நிவேத்யம், மேக தீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'எதுவும் நடக்கும்’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அபர்ணா நாயர் நேற்றிரவு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரது கணவர் சஞ்சித் மற்றும் இரண்டு மகள்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos