close
Choose your channels

விஜய்யின் இரவு பாடசாலை.. அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் இன்று முதல் தமிழக முழுவதும் இரவு பாடசாலை தொடங்க இருப்பதை அடுத்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘விஜய் பயிலகம்’ என்ற பெயரில் ஜூலை 15 முதல் அதாவது காமராஜர் பிறந்த நாளிலிருந்து இரவு பாடசாலை தொடங்கப்படும் என விஜய் மக்கள் மன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ’விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் என்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்டங்களும் இன்று வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவிகள் இந்த விஜய் பயிலகம் மூலம் படித்துக் கொள்ளலாம் என்றும் விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் துரைமுருகன் ’மக்களை நன்மதிப்பை பெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இரவு பாடசாலை தொடங்குவது நல்லது தான்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.