close
Choose your channels

நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய மாடல் அழகி: சென்னையில் பரபரப்பு!

Friday, October 16, 2020 • தமிழ் Comments
BJP
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே நள்ளிரவில் குடிபோதையில் மாடல் அழகி ஒருவர் காரை சாலையில் தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அதை கண்ட அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வடபழனி சென்ற அந்த காரை ஆற்காடு சாலையில் வாகன ஓட்டிகள் மடக்கிப்பிடித்தனர். அசுர வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது யார் என்று பார்த்தபோது உள்ளே குடிபோதையில் ஒரு பெண் இருந்துள்ளார்.

காரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் தகாத வார்த்தைகளை அந்தப் பெண் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண் யாரிடமோ தொலைபேசியில் உதவி கேட்டுக் கொண்டிருந்த போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த இதுகுறித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து பாண்டிபஜார் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் இரவு நேரம் என்பதால் அவரை காலையில் ஆஜராகும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாடல் அழகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் மாடல் அழகி ஒருவர் சாலையில் அதிவேகமாக தாறுமாறாக காரை ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.