close
Choose your channels

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Saturday, November 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை மதியம் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின்படி லயோலா கல்லூரி நிர்வாகம் பொதுக்குழு நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்து அதற்கான கடிதத்தை நடிகர் சங்கத்துக்கும், காவல் துறைக்கும் அனுப்பியது. இந்த கடிதம் காரணமாக நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் சங்க உறுப்பினர்கள் உடனே மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்படி சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் இந்த பொதுக்குழுவை காவல்துறையின் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி பொதுக்குழுவுடன் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகியவை நடத்தப்படும் என்றும், மூத்த கலைஞர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டு விருதுகளும் அளிக்கப்படும் என்று நடிகர் சங்கத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.