close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன நடிகர் சங்க தலைவர் நாசர்.. என்ன காரணம்?

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு பெரிய நடிகர்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் தல ஒரு கோடி ரூபாய் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வைப்பு நிதியாக வழங்கியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாய் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கியதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்த நிதி உதவிக்காக நடிகர் சங்க தலைவர் நாசர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்களிடம் வழங்கி உள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.