close
Choose your channels

சசிகுமார் படத்திற்காக மதுரையில் போடப்பட்ட பிரமாண்டமான அரங்குகள்

Monday, May 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'நாடோடிகள்' இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து அந்த அரங்கில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுகபாரதி எழுதிய பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது: தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை  கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரகனியும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.