close
Choose your channels

போலீஸ் கமிஷனரை சந்தித்தது ஏன்? நாசர்-விஷால் விளக்கம்

Friday, October 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாண்டவர் அணியினர் என்று கூறப்படும் விஷால் அணியினர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவில் தேர்தல் அன்று விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தபால் ஓட்டுக்கள் வரத்தொடங்கியுள்ளதால் தபால் ஓட்டுக்களை சேகரித்து வைக்கப்படும் பெட்டிக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என காவல்துறையினர்களிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் வேட்பாளர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியபோது, 'தேர்தலுக்காக ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. எனினும் தேர்தல் நாளில் மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களிக்க வரவிருப்பதால், விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கேட்கவே இன்று போலீஸ் கமிஷனரை சந்தித்ததாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.