close
Choose your channels

வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தால் அடித்து நொறுக்கிய நயன்தாரா.. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பயணம்..!

Friday, March 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா தனது கணவரை பிரியப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் இந்த வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அடித்து நொறுக்கி உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடிகை நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை அடுத்து இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் ஒரு சிலர் வதந்தி பரப்பி விட்டனர். அதுமட்டுமின்றி நேற்று நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’நான் முக்கியமான ஒன்றை இழந்து விட்டேன்’ என்றும் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பிரியப்போகிறார்கள் என்ற வதந்தியை அடித்து நொறுக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலகு ஆகியோர்களுடன் அவர் விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீண்ட இடைவேளைக்கு பிறகு என்னுடைய பாய்ஸ்களுடன் பயணம் செய்கிறேன்’ என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இருவருமே சந்தோசமாக இருக்கும் நிலையில் தன்னை பற்றி வெளி வந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.