close
Choose your channels

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள்

Thursday, July 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் தற்போது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1 முதல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், ஒரே வாரத்தில் இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இரண்டு நாயகிகளாக நடித்து இருந்த நிலையில், தற்போது இருவரும் நடித்த வெவ்வேறு படங்கள் ஒரே வாரத்தில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்ற திகில் கதையம்சம் கொண்ட படம். ஆனால் அதே நேரத்தில் ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படம் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்ற ஒரு காமெடி கலந்த பொழுது போக்கு அம்சம் கொண்ட படம். இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை எந்த படம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.