close
Choose your channels

சென்னையில் இயக்குநர்  வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. நக்சல்களுடன் தொடர்பா?

Thursday, February 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை என்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் இதனை அடுத்து ஒரு சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையின் பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில், திடீரென இன்று காலை சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த முகில் சந்திராவின் வீடு சென்னை கொளத்தூரில் இருக்கும் நிலையில் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் காரணமாகவும், அவருக்கு நக்சல்களுடன் தொடர்பு என்ற என்பது குறித்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையிலும் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.